உள்ளூர் செய்திகள்

மருத்துவ குழுவினர் ஆய்வு

Published On 2022-11-26 12:06 IST   |   Update On 2022-11-26 12:06:00 IST
  • மேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தினர்.
  • அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயந்தி, டாக்டர்கள் செந்தில்குமரன், கார்த்திக், ஆனந்தி, திவ்ய ஷாலினி, ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலூர்

மேலூர் அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை சார்பாக காயகல்பம்-2022 திட்டத்தின் கீழ் தேசிய நல்வாழ்வு திட்ட ஒருங்கிணைப்பாளரும், தென்காசி அரசு மருத்துவமனையின் டாக்டருமான கார்த்திக், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் டாக்டர் காளிராஜ், செவிலியர் அலமேலு மங்கயற்கரசி ஆகியோர் மேலூர் அரசு மருத்துவமனை வளாகம், உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, சமையல் அறை, பிரசவ வார்டு, மருத்துவ அறை, பரிசோதனை ஆய்வு கூடம், அலுவலகம் ஆகியவை தூய்மையாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.

அப்போது மேலூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயந்தி, டாக்டர்கள் செந்தில்குமரன், கார்த்திக், ஆனந்தி, திவ்ய ஷாலினி, ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News