உள்ளூர் செய்திகள்

சின்னஇலந்தைகுளம் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழு சார்பில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டது.

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1கோடி மதிப்பிலான கடனுதவி

Published On 2022-07-07 09:03 GMT   |   Update On 2022-07-07 09:03 GMT
  • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1கோடி மதிப்பிலான கடனுதவியை இ-சேவை, வணிக வள மையம் தொடக்கங்கியது.
  • ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவி கூட்டமைப்பு குழு சார்பில் இ-சேவை மையம், வட்டார வணிக வள மையம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் உணவு தானிய பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டுசிறந்த சிறுதானிய உணவிற்கான பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த மையத்தின் மூலம் 8-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவிற்கு மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் குழு தலைவர் ஹெலன்கீதா தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் வெள்ளைபாண்டி, வட்டார மேலாளர் மகாலெட்சுமி, யூனியன் சேர்மன் பஞ்சு, மகளிர் குழு செயலாளர் மணிமேகலை, பொருளாளர் சகாயகில்டா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

இதேபோன்று அலங்கா நல்லூர் யூனியன் அலுவ லகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தொழில் முனைவோர்கள் வாழ்வாதார மேம்பாடு அடையும் பொருட்டு, வட்டார வணிக வள மையம் தொடங்கப்பட்டு இந்த மையத்தின் மூலம் 100 தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் ரூ.25 லட்சத்திற்கான கடன் தொகையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேரூராட்சி பிரேமா, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசெல்வி, ராதிகா, கலாராணி, உமாதேவி, தேவி மற்றும் வட்டார இயக்க மேலாண்மை பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News