உள்ளூர் செய்திகள்

எர்ரம்மாள், தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-08-29 12:22 IST   |   Update On 2023-08-29 12:22:00 IST
  • எர்ரம்மாள், தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • ஏற்பாடுகளை திருக்கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருந்ததியர் தெருவில் ஏர்ரம்மாள் அம்மன், தொட்டிச்சி அம்மன், வலம்புரி விநாயகர், சந்தன கருப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 2 நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News