உள்ளூர் செய்திகள்

பள்ளியில் மாணவர் ஆட்சி மன்றம் தொடக்கம்

Published On 2023-08-19 13:44 IST   |   Update On 2023-08-19 13:44:00 IST
  • பள்ளியில் மாணவர் ஆட்சி மன்றம் தொடக்கம் என்ற விழா நடந்தது.
  • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே நகரி கல்வி சர்வதேச (சி.பி.எஸ்.இ) பொதுப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. துண முதல்வர்கள் அபிராமி, டயானா, துணை பொது மேலாளர் பானுபிரியா, மனிதவள மேலாளர்அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை கலெக்டர் ஜான்பிரிட்டோ தேசியகொடி ஏற்றி வைத்தார்.

விழாவில் மாணவர் ஆட்சி மன்றம் தொடங்கப்பட்டது. பள்ளி மாணவ தலைவர், துணை மாணவ தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News