உள்ளூர் செய்திகள்

இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நிதி

Published On 2022-07-29 08:30 GMT   |   Update On 2022-07-29 08:30 GMT
  • இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடிக்கான நிதியை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
  • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.

திருமங்கலம்

தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளைக்கு கல்வி மற்றும் மருத்துவசேவை பணிகளுக்காக ரூ.1 கோடி வழங்க தெற்குமாவட்ட தி.மு.க. முடிவுசெய்தது.

இதையடுத்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ.விடம் மதுரை தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன் ரூ.1 கோடிக்கான வரைவோலை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்குமாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட்பாண்டியன், மாவட்ட துணை சேர்மன் முத்துராமன், பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ்.என்.எல். செல்வம், இளைஞரணி துணைஅமைப்பாளர்கள் விமல், சுரேஷ்குமார், பகுதி அமைப்பாளர் காளிதாஸ், ஒன்றிய துணை அமைப்பாளர் தனசேகர், கிளைசெயலாளர் ராதாகிருஷ்ணன், நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News