உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்கள்

Published On 2022-08-14 09:37 GMT   |   Update On 2022-08-14 09:37 GMT
  • மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்களை மதுரை போலீஸ் கமிஷனர் வழங்கினார்.
  • ராஜேஷ்கண்ணன் (ஆயுதப்படை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை கரிமேடு, தெற்குவாசல், மதிச்சியம் ஆகிய பகுதிகளில் உள்ள சிறுவர் மன்றத்துக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகம் இலவசமாக வழங்குவது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக ஷட்டில் பேட், பந்துகள், டென்னிஸ் பால், கிரிக்கெட் பேட் மற்றும் பந்துகள், கேரம் போர்டுகள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை கொள்முதல் செய்து ஆணையர் அலுவலக பண்டகப்பிரிவில் இருந்தது.

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இலவச பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசபெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு), தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ்கண்ணன் (ஆயுதப்படை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News