உள்ளூர் செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
- சோழவந்தானில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
- வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி, சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் பள்ளியில் படிக்கும் 413 மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் வழங்கினார். இதில் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் கேபிள் ராஜா, பேரூராட்சி தலைவர் ஜெயராமன், தி.மு.க. நிர்வாகிகள் சத்தியபிரகாஷ், சந்தானலட்சுமி, லதா கண்ணன், ஸ்டாலின், கொத்தாலம் செந்தில், செல்வராணி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.