உள்ளூர் செய்திகள்

மின் தடை அறிவித்துவிட்டு ரத்து செய்யும் மின்வாரியம்

Published On 2023-10-01 13:36 IST   |   Update On 2023-10-01 13:36:00 IST
  • மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
  • மேலூர் மின்வாரியம் பலமுறை மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியிடுவதும், வெளியிட்ட அன்று காலை அதனை ரத்து செய்வதும் வாடிக்கையாக உள்ளது.

மேலூர்

மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து நேற்று மேலூர் மற்றும் தனியாமங்கலம் பகுதிகளுக்கு மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை அறிவிப்பு ஏற்கனவே அறி விக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காலை திடீரென மின் தடை அறிவிப்பை ரத்து செய்து விட்டனர். மின்சாரத்தை சார்ந்து தொழில் செய்பவர்கள் தங்கள் பணியா ளர்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவித்து விட்டனர்.

இதனால் அவர்களுக்கு நேற்று வேலை பார்க்கும் நாளில் சம்பளம் இழப்பு ஆகிவிட்டது. மேலூர் மின்வா ரியம் பலமுறை மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியிடுவதும், வெளியிட்ட அன்று காலை அதனை ரத்து செய்வதும் வாடிக்கையாக உள்ளது. எனவே மின்வாரியம் முன்கூட் டியே திட்டமிட்டு மேலூர் பகுதியில் மின்சார வாரியம் மின் நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அடிக்கடி அறிவிப்பை வெளியிடுவதும், மாற்றுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலர் அன்றைய நாளில் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும், வருங்காலங்களில் இதனை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News