உள்ளூர் செய்திகள்

கார் மோதி டிரைவர் பலி

Published On 2023-06-02 07:23 GMT   |   Update On 2023-06-02 07:23 GMT
  • கார் மோதி டிரைவர் பலியானார்.
  • வடுகபட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது36). இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள ஒரு பீரோ கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்தார். நேற்று இரவு வேலை முடித்து விட்டு வாடிப்பட்டிக்கு வரும் டவுன் பஸ்சில் பயணம் செய்து வடுகபட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின் அங்கிருந்து ஊருக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றார்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News