உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரர் சாவு சம்பவத்தில் வர்ம மருத்துவர் கைது

Published On 2023-04-07 08:55 GMT   |   Update On 2023-04-07 08:55 GMT
  • போலீஸ்காரர் சாவு சம்பவத்தில் வர்ம மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
  • திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜபாண்டி இறந்ததாக கூறப்படுகிறது.

மதுரை

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36). ஆயுதப்படை காவலரான இவருக்கு கண்மணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலியால் அவதிப்பட்ட காவலர் ராஜபாண்டி வில்லாபுரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜபாண்டி இறந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவருக்கு அளித்த வர்ம சிகிச்சையில் தவறு ஏற்பட்டு தான் இறந்ததாக காவலர் ராஜபாண்டியின் மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில் இன்று காவலரின் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வந்ததை அடுத்து வர்ம மருத்துவமனை மருத்துவர் சிவசுப்பிரமணியத்தை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News