- கணவருடன் தகராறு செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.டி. ராஜன் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது30). இவரது மனைவி அம்சவள்ளி (26). திருமண மாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் மகன் உள்ளார்.
பால்பாண்டி கோவை யில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவி இருவரும் திருமங்கலத்தில் உள்ள பால்பாண்டியின் பெற்றோர் வீட்டிற்கு வந்த னர். பின்னர் மனைவியை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு பால்பாண்டி மட்டும் கோவைக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் சம்பவ த்தன்று சமயநல்லூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சி யில் பால்பாண்டி தனது மனைவியுன் கலந்து கொண்டார். அங்கு பால்பாண்டி, அம்சவள்ளிக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது பால்பாண்டி மனைவியை திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அம்சவள்ளி பாதியிலேயே அங்கிருந்து சென்றுவிட்டார். திருமங்கலம் வந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.