உள்ளூர் செய்திகள்

2 சிறுவர்கள் விழுந்து இறந்த பள்ளம் ரெயில்வே தோண்டியதா?

Published On 2022-09-09 07:53 GMT   |   Update On 2022-09-09 07:53 GMT
  • 2 சிறுவர்கள் விழுந்து இறந்த பள்ளம் ரெயில்வே தோண்டியதா? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
  • சம்பவம் நடந்த இடம், ரெயில்வே எல்லைக்கு 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ளதாக கூறினார்.

மதுரை

திண்டுக்கல் மாவட்டம், தாமரைப்பட்டி அருகே தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் லத்தீஷ்வினி (வயது9), சர்வின்(8) என்ற 2 சிறுவர்கள் விழுந்து இறந்தனர்.

அந்தப் பள்ளம் ரெயில்வே பணிகளுக்காக தோண்டப்பட்டது என்று தகவல் வெளியானது. இதுகுறித்து மதுரை கோட்ட ெரயில்வே அதிகாரி கூறுகையில், திண்டுக்கல்லில் 2 குழந்தைகள் பள்ளத்தில் விழுந்து பலியான இடம்- தனியார் மாவு மில்லுக்கு சொந்தமானது. அவர்கள் தோண்டிய பள்ளத்தில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது. அதற்குள் விழுந்து 2 குழந்தைகளும் இறந்துனர்.

சம்பவம் நடந்த இடம், ெரயில்வே எல்லைக்கு 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ளது. இந்த சம்பவத்துடன் ெரயில்வே நிர்வாகத்தை தொடர்புபடுத்த வேண்டாம் என்றார்.

Tags:    

Similar News