உள்ளூர் செய்திகள்

சேறும் சகதியுமாக மாறிய தச்சம்பத்து - நெடுங்குளம் சாலை

Published On 2023-11-09 08:04 GMT   |   Update On 2023-11-09 08:04 GMT
  • சோழவந்தான் அருகே தச்சம்பத்து-நெடுங்குளம் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
  • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது தச்சம்பத்து கிராமம். இங்கிருந்து நெடுங்குளம் செல்லும் சாலை ஏற்கனவே மேடு பள்ளங்களுடன் போக்குவ ரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.

இந்த நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வந்தன. இதனால் மண் நிரம்பி கிடந்தது. தோண்டிய பள்ளங்கள் முறையாக மூடப்பட வில்லை. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி சாலை முழுவதுமாக சேறும் சகதியாக மாறி காணப்படுகிறது. இதனால் ஆங்காங்கே புதிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் சிரமமான நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மாற்றுப் பாதையில் சோழவந்தான் சென்று நெடுங்குளம் செல்ல வேண்டுமானால் 10 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டும் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

ஆகையால் அதிகாரிகள் உடடினயாக இந்த பகுதியை பார்வையிட்டு சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News