search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public inconvenience"

    • சோழவந்தான் அருகே தச்சம்பத்து-நெடுங்குளம் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது தச்சம்பத்து கிராமம். இங்கிருந்து நெடுங்குளம் செல்லும் சாலை ஏற்கனவே மேடு பள்ளங்களுடன் போக்குவ ரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வந்தன. இதனால் மண் நிரம்பி கிடந்தது. தோண்டிய பள்ளங்கள் முறையாக மூடப்பட வில்லை. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி சாலை முழுவதுமாக சேறும் சகதியாக மாறி காணப்படுகிறது. இதனால் ஆங்காங்கே புதிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் சிரமமான நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மாற்றுப் பாதையில் சோழவந்தான் சென்று நெடுங்குளம் செல்ல வேண்டுமானால் 10 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டும் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

    ஆகையால் அதிகாரிகள் உடடினயாக இந்த பகுதியை பார்வையிட்டு சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுவையில் ஜி-20 மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளை அரியா ங்குப்பம் அடுத்துள்ள சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.
    • அதே போல் அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் இடையே உள்ள கடைகள் அடைக்க ப்பட்டிருந்தது. அத்தியா வசிய பொருட்கள் விற்பனை கடைகள், பால் பாக்கெட், டீ கடைகள் உள்ளிட்டவைகளும் மூடப்ப ட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஜி-20 மாநாடு  தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

    அதில் கலந்து கொள்ள வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளை அரியாங்குப்பம் அடுத்துள்ள சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர். அவர்களின் பாது காப்புக்காக அரியாங்குப்பம் நகரப் பகுதியில் போலீசார் கெடுபிடிகள் செய்து வருகின்றனர்.

    மேலும் அரியாங்கு ப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் மெயின் ரோடு, காக்காயன் தோப்பு, வீராம்பட்டினம், சின்னவீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் ஏராளமான போலீசார் சாலை ஓரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் அரியாங்குப்பம் நகரப் பகுதியில் கடந்த 2 நாட்களாக கடைகள் திறக்காமல் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

    அதே போல் அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் இடையே உள்ள கடைகள் அடைக்க ப்பட்டிருந்தது. அத்தியா வசிய பொருட்கள் விற்பனை கடைகள், பால் பாக்கெட், டீ கடைகள் உள்ளிட்டவைகளும் மூடப்ப ட்டிருந்தது.

    இந்த நிலையில் புதுவையில் 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரியாங்குப்பம் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனால் அரியாங்குப்பம் வீராம்பட்டினம் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமான குவிந்தனர்.

    வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கியிருந்த சொகுசு விடுதி செல்லும் வழியில் இந்த பகுதி அமைந்துள்ளதால் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் அனுமதி அளித்ததாக காங்கிரசார் தெரிவித்தனர்.

    இருப்பினும் போலீஸ் பாதுகாப்போடு வீராம்ப ட்டினம் சந்திப்பில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக போலீசார் செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும், அலை கழிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×