உள்ளூர் செய்திகள்

ெரயில் முன் பாய்ந்து கட்டிட காண்டிராக்டர் தற்கொலை

Published On 2023-06-25 14:38 IST   |   Update On 2023-06-25 14:38:00 IST
  • கடன் தொல்லையால் ெரயில் முன் பாய்ந்து கட்டிட காண்டிராக்டர் தற்கொலை செய்தார்.
  • 200 மீட்டர் தூரத்திற்கு ெரயில் இழுத்து சென்றது.

மதுரை

மதுரை மாடக்குளம் வி.கே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(38) கட்டிட காண்ட்ராக்டர். இவருக்கு மாரி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர் தொழில் சம்பந்தமாக வாங்கிய கடனை தர முடியாத நிலையில் தவித்து வந்த இவர் பைக்காரா 7-வது ெரயில்வே பாலத்தில் ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதைதொடர்ந்து ரெயில் முன் பாய்ந்த அவரை ெரயில் மோதியதில் துண்டு, துண்டாக சிதறியது 200 மீட்டர் தூரத்திற்கு ெரயில் இழுத்து சென்றது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் ெரயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News