உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

Published On 2023-02-07 13:31 IST   |   Update On 2023-02-07 13:31:00 IST
  • மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலியானார்.
  • இந்த விபத்து குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே உள்ள நல்லொச்சான்பட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சித்தர் நத்தத்தை சேர்ந்த சரவணகுமார்(38) கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டியை நோக்கி வந்து ெகாண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளும், கல்லூத்தை சேர்ந்த ரேசன் கடை விற்பனையாளர் ராஜபாண்டி(40), ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நல்லொச்சான்பட்டியில் மோதி கொண்டன. இந்த விபத்தில் சரவணகுமார் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார்.

ராஜபாண்டி படுகாயத்துடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News