உள்ளூர் செய்திகள்
ெரயில் நிலையத்தில் தூய்மை வார விழா
- மதுரை ரயில் நிலையத்தில் தூய்மை வார விழா நடந்தது.
- மதுரை கோட்ட அலுவலகத்தில் தூய்மை பராமரிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
மதுரை
மதுரை ெரயில்வே கோட்டத்தில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி வரை தூய்மை இரு வார விழா கடைபிடிக்கப் படுகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை ெரயில்வே காலனியில் தேசிய மாணவர் படையினர், பேராசிரியர் கார்த்திகேயன் தலைமையில் ஊர்வலமாக சென்று தூய்மை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அடுத்தபடியாக மதுரை கோட்ட அலுவலகத்தில் தூய்மை பராமரிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், கூடுதல் மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மகேஷ் கட்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை மட்டுமின்றி நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், ராமேசுவரம் ெரயில் நிலையங்களிலும் தூய்மை பராமரிப்பு உறுதியேற்பு நடந்தது