உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி

Published On 2022-07-21 07:35 GMT   |   Update On 2022-07-21 07:35 GMT
  • அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி நடந்தது.
  • 23 பள்ளிகளை சேர்ந்த 142 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய அளவிலான நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டி நடந்தது. இதில் 23 பள்ளிகளை சேர்ந்த 142 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் மேற்பார்வையில் போட்டிகள் நடத்தப்பட்டன. தலைமையாசிரியர் (பொறுப்பு) கர்ணன் தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் நவமணி, பாலின் ஜெரால்டு மேரி, சர்மிளா ஆகியோர் போட்டியை கண்காணித்தனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

Tags:    

Similar News