உள்ளூர் செய்திகள்

செல்லம்பட்டி ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பாண்டி இல்ல விழா

Published On 2023-10-21 13:11 IST   |   Update On 2023-10-21 13:11:00 IST
  • செல்லம்பட்டி ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பாண்டி இல்ல விழா நாளை நடக்கிறது.
  • அ.தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

மதுரை

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி மாயத்தேவர்- சோங்கம்மாள், விராலி மாயன்பட்டி சீனிபேயத் தேவர்- புஷ்பம் ஆசீர்வா தத்துடன் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி கள் நல்லாசியுடன் கூட்டுறவு வங்கி தலைவரும் செல்லம் பட்டி ஒன்றிய அ.தி.மு.க இளைஞர் பாசறை செயலா ளர் வடக்கம்பட்டி பாண்டி-லெட்சுமி கயல்விழி ஆகி யோரின் இல்ல விழா சட்ட மன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், மதுரை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மூனாண்டிபட்டி வி.கே.எஸ்.மஹாலில் நாளை நடக்கிறது.

விழாவில் முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ, அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் மதுரை கிழக்கு மாவட்ட செய லாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் நீதிபதி மற்றும் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, அ.தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள், உறவினர் கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News