உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீடு

வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

Published On 2023-07-14 09:22 GMT   |   Update On 2023-07-14 09:22 GMT
  • வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
  • கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திரு மங்கலம் முகமதுஷாபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் முத்துபால்பாண்டி(வயது 39). இவர் மதுரையில் கண்கண்ணாடி கடை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி.

நேற்று முத்துபால் பாண்டிக்கு பிறந்தநாள் என்பதால் மனைவி புவனேஸ்வரி, தாய் கமலம் மற்றும் குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று கொண் டாட முத்துபால்பாண்டி முடிவு செய்தார். இதற்காக இரவு 9.30 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்றனர்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்ற னர். நகைபெட்டிகளை அருகேயுள்ள முட்புதர்களில் வீசி சென்றனர்.

பிறந்தநாள் கொண்டாடத்தினை முடித்துவிட்டு இரவு 10.45 மணிக்கு முத்துபால்பாண்டி குடும்பத்தினருடன் வீடு திரும்பினர்.வீடு திறந்து கிடக்கவே உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் தலைமையில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகைநிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற வீடு மதுரை - விருதுநகர் நான்குவழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் திருட்டு சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் முத்துபால் பாண்டி வீட்டில் திருடிய பின்பு நான்குவழிச்சாலை வழியாக தப்பி சென்றி ருக்கலாம் என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் திருமங்கலம் டவுன் போலீசார் விசா ரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

Similar News