உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பரிதாப சாவு

Published On 2022-12-05 06:44 GMT   |   Update On 2022-12-05 06:44 GMT
  • திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
  • அவர்களை அங்கிருந்த வர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர்.

திருமங்கலம்

மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் என்ற சுபாஷ்(வயது 14). இவருடைய நண்பர் அழகுபாண்டி(25). இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் அருகே உள்ள வில்லூருக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மதுைரக்கு புறப்பட்டனர்.

திருமங்கலம் செங்குளம் 4 வழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் மோட்டார் சைக்கிள் சென்டர் மீடியாவில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுபாஷ், அழகுபாண்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அங்கிருந்த வர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர். அங்கு பாலமுருகனின் உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் அங்கு பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலமுருகன் தாத்தா நாகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags:    

Similar News