உள்ளூர் செய்திகள்

வாலிபர்-முதியவர் மீது தாக்குதல்

Published On 2023-06-19 08:29 GMT   |   Update On 2023-06-19 09:17 GMT
  • மதுரையில் வாலிபர்-முதியவர் மீது தாக்குதல் நடத்திய இளம்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • தொகையை முதியவர் கந்தசாமி திருப்பி செலுத்தவில்லை.

மதுரை

மதுரை ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சித்திரவேல்(வயது29). ஆரப்பாளையம் கோமஸ்பாளையத்தை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் கவியரசன்.

இவர்க ளுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மேல பொன்னகரம் கார்ப்ப ரேஷன் காலனி சந்திப்பு 2-வது தெரு அருகே சித்திரவேல் சென்று கொண்டிருந்தார்.

அவரை கவியரசன், சிந்தனைச்செல்வன், சின்ன கருப்பன் ஆகியோர் வழிமறித்து ஆபாசமாக பேசி மரக்கட்டையால் தாக்கினார். இந்த தாக்குதல் குறித்து சித்ரவேல் கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிந்தனை செல்வன் மற்றும் சின்னக்கருப்பனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிந்தனை செல்வன் கொடுத்த மற்றொரு புகாரில், சித்திரவேல், காளிதாஸ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர். சித்திரவேலை கைது செய்தனர்.

இளம்பெண்

மதுரை கே.புதூர் அழகர்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது75). கே.புதூர் சர்வேயர் காலனி ஆவின் நகர் 2-வது தெருவை சேர்ந்த செல்வகணேசனின் மனைவி லாவண்யா (28). இவரது பெற்றோர் கந்தசாமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். பின்னர் வாடகை வீட்டை காலி செய்து விட்டனர். இவர்கள் ரூ1500-யை மின்சார கட்டண அட்வான் சாக கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த தொகையை முதியவர் கந்தசாமி திருப்பி செலுத்தவில்லை. அதை கேட்க சென்ற லாவண்யா அவரை ஆபாசமாக பேசி யுள்ளார். அவரை பிளாஸ் டிக் வாளியால் தாக்கி யுள்ளார். இது குறித்து முதியவர் கந்தசாமி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து கந்த சாமியை தாக்கிய லாவண் யாவை கைது செய்தனர்.

Tags:    

Similar News