உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். 

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

Published On 2023-09-28 07:08 GMT   |   Update On 2023-09-28 07:08 GMT
  • சோழவந்தான் பகுதியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது
  • ஆர்.பி. உதயகுமார் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார்.

சோழவந்தான்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் கிழக்கு, மேற்கு, கச்சிராயிருப்பு, தென்கரை பகுதிகளில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

முகாமிற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் மேலக்கால் கிழக்கு கிளை கழகத்திற்கு ராஜ பாண்டி, மேற்கு பகுதிக்கு காசிலிங்கம், கச்சிராயி ருப்புபகுதியில் அவைத் தலைவர் முனியாண்டி, தென்கரையில் ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம் ஆகியோர் ஏற்பாட்டில் உறுப்பினர்கள் முகாமில் சேர்ந்தனர்.

இதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார்.

முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், தமிழரசன் ஒன்றிய செயலாளர்கள் வாடிப் பட்டி வடக்கு காளிதாஸ், செல்லம்பட்டி எம்.வி.பி. ராஜா, மதுரை மேற்கு-தெற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், அம்மா பேரவை வெற்றிவேல், பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, இளைஞர் அணி கேபிள் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News