உள்ளூர் செய்திகள்

வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published On 2022-06-23 10:22 GMT   |   Update On 2022-06-23 10:22 GMT
  • மதுரை மாநகராட்சி கூட்டம்: சொத்து வரி உயர்வை ரத்து செய்யாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
  • அ.தி.மு.க. கவுன்சிலர் எஸ்.எம்.டி. ரவி பேசும்போது, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய சொல்லி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

மதுரை

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையிலும், கமிஷனர் சிம்ரன் ஜித் காலோன் முன்னிலையிலும் நடந்தது. பெரும்பாலான அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னைக்கு சென்றுவிட்டதால், குறை வான கவுன்சிலர்களே கூட்டத்தில் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. கவுன்சிலர் எஸ்.எம்.டி. ரவி பேசும்போது, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய சொல்லி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். பின்னர் சொத்து வரி உயர்வை ரத்து செய்யாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் பேசும்போது, தெற்கு தொகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு இருப்பதால் கழிவுநீர் வெளி யேறி ரோட்டில் செல்கிறது. மேலும் குடிநீர் பிரச்சினை ஆங்காங்கே ஏற்படுகிறது. அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News