உள்ளூர் செய்திகள்

ஆதித்தமிழர் பேரவை கூட்டம்

Published On 2023-05-14 07:43 GMT   |   Update On 2023-05-14 07:43 GMT
  • ஆதித்தமிழர் பேரவை கூட்டம் நடந்தது.
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வாடிப்பட்டி

மதுரை வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் செயற்குழு கூட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழ் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அம்பேத்செல்வம், நிதிச்செயலாளர், பகலவன், கொள்கை பரப்புச் செயலாளர், சாந்தி முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர் சிறுவாலை செல்வபாண்டி வரவேற்றார்.

தொழிலாளர் பேரவை மாநில செயலாளர் ஈழவேந்தன் பேசினார். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாரதிதாசன், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் கவுரி, மாவட்ட துணைச் செயலாளர் ஆதி அழகன், துணைத் தலைவர் சரவணன், கலை இலக்கிய அணி செயலாளர் ஆதிரையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது, மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கொடியேற்றுவிழா நடத்துவது, மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News