உள்ளூர் செய்திகள்

மீண்டும் புத்துயிர் பெறும் மரபு வழி விளையாட்டு போட்டிகள்

Published On 2023-08-18 07:02 GMT   |   Update On 2023-08-18 07:02 GMT
  • வாடிப்பட்டியில் மரபு வழி விளையாட்டு போட்டிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
  • சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் பல்வேறு போட்டிகள் நடந்தன.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் காலம் மாற்றத்தால் மறக்கப் பட்டு வரும் மரபு வழி விளையாட்டுகள் அறிமுக விழாவும் மற்றும் மரபு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் மாணவர்களுக்கு பச்சை குதிரை, 7-கல், கிட்டிப்புல் போன்ற விளை யாட்டுகளும், மாணவிகளுக்கு பாண்டியாட்டம் (நொண்டி), கிச்சுகிச்சு தாம்பூலம் மற்றும் பல்லாங்குழி ஆகிய விளை யாட்டு போட்டிகளும் நடத்தப் பட்டது. இந்த விளையாட்டு போட்டிக்கு தலைமையாசிரியர் சந்திரன் தலைமை தாங்கி னார். ஊராட்சி மன்றத்தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரெங்கநாயகி, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பரம சிவம், உணவுப்பொருள் பாது காப்பு அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்மரபு அறக்கட்டளை மதுரை கிளை பொறுப்பாளர் சுலேகா பானு தமிழ் மரபு அறக்கட்டளை அறிமுகவுரையாற்றினார். மரபு விளையாட்டுகள் குறித்து மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி பேராசிரியை பாப்பா விளக்கி பேசினார்.

இப்போட்டியின் நடுவர்க ளாக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் வெற்றியாளர் களை தேர்வு செய்தனர்.இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் சரவணக்குமார், மோசஸ், நஜ்மூதீன், பேராசிரியை.இறைவாணி, முத்துக்குமார், தாமரைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News