உள்ளூர் செய்திகள்
- அரிசி வியாபாரி மனைவியிடம் 7 பவுன் செயின் பறிப்பு
- கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், அரிசி வியாபாரி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 50). இவர் இரவு திண்டுக்கல் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது.
அதில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது தொடர்பாக விஜயலட்சுமி, கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.