உள்ளூர் செய்திகள்

முதியவரை தாக்கிய 3 பேர் கைது

Published On 2023-04-19 09:48 GMT   |   Update On 2023-04-19 09:48 GMT
  • மதுரை அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பொதும்புவை சேர்ந்த ஸ்ரீமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை தெற்குவெளி வீதி பழைய மகாளிப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது72). இவருக்கும், தெற்குமாசி வீதி ஜடாமுனி கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபாலன் (47) என்பவருக்கும் தங்களது மூதாதையர் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் ராஜகோபாலன் 4 பேருடன் சென்று லட்சுமணனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து லட்சுமணன் தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலன், ரங்கன் ஆசாரி தெரு ரமேஷ், அவரது மனைவி ராதிகா (43),பொதும்புவை சேர்ந்த மகேந்திரன் (63) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பொதும்புவை சேர்ந்த ஸ்ரீமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News