உள்ளூர் செய்திகள்

மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

Published On 2023-08-31 07:05 GMT   |   Update On 2023-08-31 07:05 GMT
  • மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியானார்கள்.
  • வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே மேலக்கோட்டை நான்கு வழிச்சாலை பகுதியில் மதுரை சுப்ரமணியபுரம் பகுதியைச் ராஜாசந்திரசே கர் என்பவருக்கு சொந்த மான புதிய பட்டாசு கடை அமைக்கும் பணி நடை பெற்று வந்தது.

ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த முத்து சங்கையா, நல்லூரைச் சேர்ந்த முத்துக் குமார், மூவரசன் ஆகிய மூன்று பேரும் கடையின் அருகே சோலார் மின்வி ளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் வயரில் இரும்பு கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முத்து சங்கையா (வயது 35) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற இரண்டு பேரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீசார் இறந்த முத்துசங்கையா உட லைக் கைப்பற்றி திரு–மங்கலம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். இது குறித்து திருமங்க லம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதே போல் திருமங்கலம் தாலுகா போலம்பட்டி பகு தியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 35). இவருக்கு திருமணமாகி ராஜலெட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கண்டித்தே வன்பட்டி பகுதியில் மின்கம் பத்தில் ஏறி வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கிய தில் கீழே விழுந்தவர் மின் சார கம்பத்தின் கீழே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் வைக்கப்பட்டி ருந்த இரும்பு கம்பியில் தலை அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடலைக் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News