உள்ளூர் செய்திகள்

மதுரை- ராமேசுவரம் சிறப்பு ரெயில் மூலம் ரூ.2 லட்சம் வசூல்

Published On 2022-07-29 14:53 IST   |   Update On 2022-07-29 14:53:00 IST
  • மதுரை- ராமேசுவரம் சிறப்பு ரெயில் மூலம் ரூ.2 லட்சம் வசூல் கிைடத்தது.
  • ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

மதுரை

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நேற்று முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இது மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் சென்றது.

கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி வழியாக சென்ற ரெயிலில் 1140 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் 72 ஆயிரத்து 700 ரூபாய் கட்டணம் வசூல் ஆனது.

மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்ட ரெயில், மாலை 5.15 மணிக்கு மதுரை வந்தது. இதில் 1853 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 575 ரூபாய் கட்டணம் வசூல் ஆனது.

மதுரை- ராமேசுவரம் ஆடி அமாவாசை சிறப்பு ரெயிலில் 2993 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் ரெயில்வே துறைக்கு ஒரே நாளில் ரூ.2 லட்சம் வருமானம் கிடைத்தது.

Tags:    

Similar News