உள்ளூர் செய்திகள்

டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

Published On 2023-04-25 08:48 GMT   |   Update On 2023-04-25 08:48 GMT
  • மதுரை அருகே டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
  • இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது.

மதுரை

மதுரை முரட்டன்பத்திரியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 45). கால் டாக்சி டிரைவர். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக கரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு தரப்பினரும் சமரசம் ஆகிவிட்டனர். சம்பவத்தன்று மாலை செல்லப்பாண்டி புது ஜெயில் ரோட்டில் சென்றார். அங்கு வந்த 2 பேர் அவரிடம் வழிமறித்து தகராறு செய்தனர்.

இதை செல்லப்பாண்டி தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த இருவரும் அவரை கத்தியால் குத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுஜெயில் ரோட்டை சேர்ந்த சிவகுமார் மகன் கட்டாரி கார்த்திக் (23), ராம்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News