உள்ளூர் செய்திகள்

சூதாடிய 11 பேர்கைது

Published On 2023-06-25 14:07 IST   |   Update On 2023-06-25 14:07:00 IST
  • பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடம் இருந்து ரூ. 75 ஆயிரம், சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை

திண்டுக்கல் மெயின்ரோடு விசாலாட்சி மில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 11 பேரை பிடித்து விசாரித்தனர். அதில்அவர்கள் மேலப்பொன்னகரம் 2-வது தெரு கோவிந்தசாமி, சுரேஷ் (32), அரசன் (53), சாகுல்ஹமீது (43), லட்சுமணன் உள்ளிட்டவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ. 75 ஆயிரம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 11 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

Similar News