உள்ளூர் செய்திகள்
சிதம்பரத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்றவர் கைது
- சிதம்பரத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது.
கடலூர்:
சிதம்பரம் நகர போலீசார் தில்லை காளி அம்மன் கோவில் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் சிதம்பரம் வேங்கான் தெருவை சேர்ந்த சின்னதுரை (56) என்பவரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 10 லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.