லாரி பட்டறை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை
- காளியப்பன் கடந்த 27-ந் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வீட்டின் கதவு பூட்டியே கிடந்ததால், அக்கம் பக்கத்–தினர் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
தருமபுரி,
தருமபுரி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் காளி யப்பன் (வயது65). லாரி மெக்கானிக்கான இவர் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமண மாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவி காளியப்பனை பிரிந்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில் காளியப்பன் 2-வதாக வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரும் கருத்து வேறுபாடு காரணமாக காளியப்பனை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமு–டைந்து காணப்பட்ட காளியப்பன் கடந்த 27-ந் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டின் கதவு பூட்டியே கிடந்ததால், அக்கம் பக்கத்–தினர் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர். இதனால், அவர் இறந்த சம்பவம் குறித்து யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் காளியப்பன் வீட்டில் திடீரென்று துர்நாற்றம் வீச தொடங்கி–யது. அதன் பின்னரே அக்கம் பக்கத்தினர் காளி–யப்பன் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளியப்–பன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.