உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 10 தாலுகாக்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்- நாளை நடக்கிறது

Published On 2023-09-08 09:05 GMT   |   Update On 2023-09-08 09:05 GMT
  • இந்த ஆண்டின் 3-வது தேசிய மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ளது.
  • தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி சந்திரா தொடங்கி வைக்கிறார்.

நெல்லை:

மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆலோசனை யின் படி இந்த ஆண்டின் 3-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவால் நெல்லை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 10 தாலுகாக்களில் நடைபெற உள்ளது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜீத வழக்குகள் காசோலை வழக்குகள் போன்ற வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கி கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நாளை காலை 9.45 மணிக்கு நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி யுமான சந்திரா தொடங்கி வைக்கிறார்.

எனவே இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்தகவலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சந்திரா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News