உள்ளூர் செய்திகள்
சிறுமியை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை
- விஸ்வநாதன் (வயது 38). இவர் நாமக்கலில் பிரேம் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார்.
- 14 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, விஸ்வநாதன் கடத்தி சென்றுள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் வகுரம்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 38). இவர் நாமக்கலில் பிரேம் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, விஸ்வநாதன் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை, அந்த பகுதியில் உள்ள அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி, விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.பின்னர் நாமக்கல் சிறையில் அடைத்தனர்.