உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் சாராயம் கடத்தியவர் கைது

Published On 2023-06-09 13:01 IST   |   Update On 2023-06-09 13:01:00 IST
  • பண்ருட்டியில் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
  • மதகடிப்பட்டியில் இருந்து 48 சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்ததாக கூறினார்.

கடலூர்:

பண்ருட்டி போலீஸ் டி.எஸ்.பி.சபியுல்லா உத்தரவின் பேரில்தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது பண்ருட்டி ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாககட்டைப்சாபையுடன் அமர்ந்திருந்தவரை பிடித்து விசாரித்தனர்.அவர் திருச்சிஅரியமங்கலம் வேலாயுதம் தெருவை சேர்ந்த மணிவண்ணன்(46) என தெரிய வந்தது. இவர் பாண்டிச்சேரி மதகடிப்பட்டியில் இருந்து 48 சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்ததாக கூறினார். அவரை பிடித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைதொடர்ந்து அவரை கைது செய்துஅவரிடமிருந்து சாராய பாக்பகெட்டுகளை பறிமுதல் செய்து அவரைபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News