உள்ளூர் செய்திகள்

மரக்காணத்தில் டாஸ்மாக் கடையில் மதுபான விற்பனை படுஜோர்: வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம்

Published On 2023-05-18 07:40 GMT   |   Update On 2023-05-18 07:40 GMT
  • விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.
  • டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மரக்காணம் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கிராமங்களில் சாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட வர்களில் பெரும்பாலா னோர். தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதனால் மரக்காணம் பகுதியில் சாராய விற்பனை அறவே ஒழிந்தது என்றே கூறலாம். இந்நிலையில் மதுப்பிரி யர்கள் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்று மது அருந்து கின்றனர். டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த கடை திறந்தது முதல் மூடும் வரையில் மது பிரி யர்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். வழக்கத்தை விட 3 மடங்கு கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை யாவதாக டாஸ்மாக் ஊழி யர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News