அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
- விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டுமென்று விழிப்புணர்வு.
- துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பாபநாசம்:
பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வட்ட சட்டப்பணி குழு மற்றும் தீயணைப்பு துறை இணைந்து நடத்திய விபத்தில்லா தீபாவளி சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார்.
முகாமில் பாபநாசம் மாவட்ட உரிமையல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல்கனி கலந்துகொண்டு விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டுமென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பாபநாசம் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் இளங்கோவன் முன்னிலையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டுமென அறிவுத்தினார்.
விழாவில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், தீயணைப்பு படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.
முடிவில் உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.