உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
- இளம்பெண் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனது தந்தை வீட்டில் தங்கியிருந்தார்
- வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் சித்துவார்பட்டியை சேர்ந்த முருகன் மகள் ராஜேஸ்வரி(28). இவருக்கும் குபேந்திரராஜா என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் பெண்குழந்தை உள்ளது.
ராஜேஸ்வரிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனது தந்தை வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில் வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.