உள்ளூர் செய்திகள்

மனைவியை மிரட்ட விஷம் குடித்த தொழிலாளி சாவு

Published On 2022-12-28 09:13 GMT   |   Update On 2022-12-28 09:13 GMT
  • தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செகுடன்தாளியை சேர்ந்தவர் தனபால் (வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தனபாக்கியம் (34).

தனபால் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.சம்பவத்தன்று தனபால் மது போதையில் வீட்டிற்கு வந்தார்.

இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனையடுத்து அவர் தனது மனைவியை மிரட்டுவதற்காக விஷத்தை குடித்தார்.

சிறிது நேரத்தில் அவருக்கு வயிறு வலி அதிகமானது. இதனையடுத்து தனபால் தனது நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் உடனடியாக விரைந்து சென்று தனபாலை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தனபால் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கருமத்தப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News