உள்ளூர் செய்திகள்

கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-04-30 15:40 IST   |   Update On 2023-04-30 15:40:00 IST
  • அவருக்கு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
  • மனம் உடைந்து போன சங்கர் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனப்பள்ளி சிட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது45). கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். இதனால் அவருக்கு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தும் எந்தவித பலன் அளிக்கவில்லை. இதனால் மனம் உடைந்து போன சங்கர் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News