உள்ளூர் செய்திகள்

காரமடை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி கைது

Published On 2022-07-13 10:29 GMT   |   Update On 2022-07-13 10:29 GMT
  • போலீசார் தலைமறைவாக இருந்த சுதனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
  • குடிபோதையில் இருந்த சுதன் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

காரமடை:

கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் நாகப்பட்டிணத்தை சேர்ந்த சுதன் (வயது 30) என்பவர் வசித்து வந்தார்.

அவர் மாணவியின் தந்தையுடன் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். அப்போது சுதன் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு வந்து செல்வார்.

சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வங்கிக்கு சென்று இருந்தனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். குடிபோ தையில் இருந்த சுதன் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

பின்னர் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

பெற்றோர் வந்ததும் மாணவி நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த சுதனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.  

Tags:    

Similar News