உள்ளூர் செய்திகள்
கயத்தாறு அருகே காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
- கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
- தொடர்ந்து அம்மாளுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் 108 குடங்களில் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவிலில் பல்வேறு யாகங்கள், ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மாளுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நெல்லை சுந்தரேசர் சர்மா தலைமையில் விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், அங்கு ராபாசனம், சேம கும்ப பூஜை உட்பட 21 பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள்,அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வடக்கு சன்னதுபுதுக்குடி கிராம மக்கள் மற்றும் விழா கமிட்டியார் செய்திருந்தனர்.