உள்ளூர் செய்திகள்

கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்ட காட்சி.

விழுப்புரம் கோவிந்தசாமி நகர் சிவவிஷ்ணு கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2022-06-13 14:49 IST   |   Update On 2022-06-13 14:49:00 IST
  • விழுப்புரம் கோவிந்தசாமி நகர் சிவவிஷ்ணு கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
  • விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் சிவ விஷ்ணு, விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமி, ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, சிவதுர்க்கை, சனீஸ்வர கோவில் உள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள கோவிந்தசாமி நகர் இ.எஸ்., கார்டன் கோவில் வளாகத்தில் உள்ள சிவ விஷ்ணு, விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமி, ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, சிவதுர்க்கை, சனீஸ்வர கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. கலசங்களுக்கு காலை 6.45 மணிக்கு புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகத்தை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடந்தது.

அப்போது கோவில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், காளிதாஸ், திருப்பதி பாலாஜி, பாலகிருஷ்ணன், சிவகுமார், கிருஷ்ணமூர்த்தி, தயானந்தம் இ.எஸ். பாஸ்கர், அசோக்குமார், பாபு, கார்த்தி, தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் சற்குணம், தொழிலதிபர் சிவா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன் ஆகிய நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அமிதகணபதி சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் பகுதி வாழ் பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.

Tags:    

Similar News