உள்ளூர் செய்திகள்

பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.

ரஷ்யா சென்று வந்த அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு

Published On 2023-10-13 09:18 GMT   |   Update On 2023-10-13 09:18 GMT
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
  • ரஷ்யா பயணம் குறித்த அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டான்.

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே பெரியக்கோட்டையை சேர்ந்தவர் வீரையன்.

இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 17).

இவர் மதுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்த நிலையில், பிரம்மோஸ் மைய நிறுவனரும், மூத்த விஞ்ஞானியுமான சிவதானுப்பிள்ளை, அரசு பள்ளி மாணவர்கள் ராக்கெட் அறிவியில் தொழில்நுட்பத்தை இணைய வழி வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இணைய வழி தேர்வு செய்யப்பட்டது.

அதில் மதுக்கூர் அரசு பள்ளி மாணவன் சந்தோஷ் தேர்ந்தெ டுக்கப்பட்டார்.

தமிழகம் முழுவதும் தேர்ந்தெ டுக்கப்பட்ட 40 பேரில் சந்தோஷ் ஒருவர் ஆவார்.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிய மாணவர் சந்தோஷ்க்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், ராக்கெட் சயின்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஒவியரசன், உதவி தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜ், பாலகுமார், ஆசிரியைகள் மதுக்கூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து மாலை அணிவித்து வெடி வெடித்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

மேலும் அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவிற்குத் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

பள்ளி உதவித்தலைமை யாசிரியர்கள் பாலகுமார், கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவருக்குப் பயிற்சியும் ஊக்கம் அளித்த ஒருங்கிணைப்பாளர்.

ஓவியரசன் தலைமை ஆசிரியரால் கௌர விக்கப்பட்டார்.

மேலும் மாணவர் சந்தோஷ் தனது ரஷ்யா பயணம் பற்றிய அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து நீங்களும் என்னைப்போல் பயணம் மேற்கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு ஊக்கமூட்டினார்.

Tags:    

Similar News