உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி டோல்கேட்டை இடமாற்றம் செய்ய வேண்டும்

Published On 2022-11-17 15:21 IST   |   Update On 2022-11-17 15:21:00 IST
  • கிருஷ்ணகிரி டோல்கேட்டை இடமாற்றம் செய்ய வேண்டும்
  • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி டோல்கேட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என பர்கூர் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சஞ்சீவி மகாலில், பர்கூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வரவேற்பு ரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் போச்சம்பள்ளி சாந்தமூர்த்தி, பர்கூர் தெற்கு அறிஞர், பேரூர் செயலாளர்கள் வெங்கட்டப்பன், பாபு, பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய பொருளாளர் பிரான்சிஸ், மாவட்ட பிரதிநிதிகள் மாதவன், காந்தி, ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி.யுமான சுகவனம், முன்னாள் எம்எல்ஏ., கோவிந்தசாமி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், நாகராஜ், அஸ்லம், கோதண்டன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

கூட்டத்தில், இரண்டாம் முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துகொள்வது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக மதியழகன் எம்எல்ஏ.வை படேதலாவ் ஏரி கால்வாய் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து, நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வது.

பர்கூர் தொகுதியில் படேதலாவ் கால்வாயை தனது சொந்த செலவில் சீரமைத்து கொடுத்த மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகனுக்கு நன்றி தெரிவித்துகொள்வது.

பர்கூர் பகுதி மக்கள் தினமும் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போன்ற இடங்களுக்கு சென்று வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறை செல்லும் போதும் கிருஷ்ணகிரி டோல்கேட்டில் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News