கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
- மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
- ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை என பல்வேறு இடங்களில் நடக்கிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1,300 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
காலை, 7 மணி முதல் மாலை, 7 மணி வரை நடக்கும் முகாமில், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை என பல்வேறு இடங்களில் நடக்கிறது.
இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதில், 12 வயத்திற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டியவர்களும் பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது