உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு சம்பவங்களில்6 பேர் தற்கொலை

Published On 2023-04-28 15:09 IST   |   Update On 2023-04-28 15:09:00 IST
  • எந்தவித பலன்அளிக்காததால் விரக்தியில் முனியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக 3 பெண்கள் உள்பட 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சாவித்ரி (வயது45). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பதகராறு இருந்து வந்தது. இதனால் மனவிரக்தியில் இருந்த சாவித்ரி கடந்த நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணவர் வீரபத்திரன் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியை அடுத்த பூனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி பொன்னியம்மாள். இவர்களுக்கு முனியம்மாள் (30) என்ற மகள் உள்ளனர். இந்த நிலையில் முனியம்மாளுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் எந்தவித பலன்அளிக்காததால் விரக்தியில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பொன்னியம்மாள் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் வெண்ணப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (43). இவர் குடும்பத்தகராறு காரணமாக மனவிரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி பங்களா தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (30). கூலித்தொழிலாளியான இவர் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே பத்தலப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி அர்ச்சனா (28). கூலித்தொழிலாளியான இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த 25-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று ஊத்தங்கரை அடுத்த மயிலாடும்பாளற பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (45). கூலித்தொழிலாளியான இவர் வயிற்று வலியால் கடும் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்தவித பலனும் அளிக்காததால், விரக்தியில் இருந்த அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து கீேழ மயங்கி விழுந்து கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News