கோயம்பேடு வணிக வளாகத்தை திருமழிசைக்கு மாற்றக் கூடாது- வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள்
- வளாகம் ஒன்றினை உருவாக்கிட தமிழக அரசின் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முயற்சிப்பதாக தெரிய வருகின்றது.
- அதனை நம்பியிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக் கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசியாவிலேயே பெரிய வணிக வளாகமான 85 ஏக்கர் பரப்பளவுள்ள கோயம்பேடு வணிக வளாகத்தை திருமழிசைக்கு மாற்றுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மம் ஆலோசித்து வருவதாக தெரிய வருகின்றது.
85 ஏக்கர் பரப்பளவுள்ள கோயம்பேடு வணிக வளாகத்தில், மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள், மால் கள், ஸ்டார் ஹோட்டல்கள், போன்ற பல்வேறு வகை மேம்படுத்தப்பட்ட வளாகம் ஒன்றினை உருவாக்கிட தமிழக அரசின் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முயற்சிப்பதாக தெரிய வருகின்றது.
பல்வேறு வகைகளில் தங்களின் வாழ்வாதாரத்தை முதலீடு செய்து வணிகம் செய்து வரும் கோயம்பேடு மார்க்கெட் வணிகர்கள், மீண்டும் ஒரு மாற்றத்தைத் தேடி அலையும் இக்கட்டான சூழ்நிலையை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மம் கவனத்தில் கொண்டு, அதனை தடுத்து நிறுத்தி கோயம்பேடு வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடவும், அதனை நம்பியிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.